Wednesday 8th of May 2024 07:04:54 AM GMT

LANGUAGE - TAMIL
மட்டக்களப்பில்
14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 14 வயது சிறுவன் கைது!

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 14 வயது சிறுவன் கைது!


மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிய வருவதாவது,

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று (மே-24) கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறுவன் காதலித்து வந்துள்ளhன். சம்பவதினமான கடந்த 23 ஆம் திகதி பகல் 12 மணியளவில் கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோதரனின் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து காவல் நிலையத்தில் நேற்று (மே-24) முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதையடுத்தே குறித்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE